கடவுள் பெயரைச் சொல்லி தாக்குதல்! வைரல் வீடியோ!

08 October 2019 அரசியல்
biharbrutalfight.jpg

பீகாரில் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறிக் கொண்டு, வாலிபரை இருவர் தாக்கும் வீடியோ, தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பீகாரில் கவுன்சிலரின் மகன் ஒருவர், அப்பகுதியில் உள்ள ஒருவரை தாக்கியுள்ளார். இதனால், பலத்தக் காயமடைந்த அந்த நபர், பீகாரில் உள்ள கைமூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில், அந்த கவுன்சிலரின் மகனை ஒரு சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்கள், கண்மூடித்தனமாக அந்த நபரைத் தாக்கியுள்ளனர். மேலும், தாக்கும் பொழுது, ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி அடிக்கின்றனர்.

அந்தத் தாக்குதலில், பலத்தக் காயம் அடைந்த அந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெறும் பொழுது, அங்கு காவலர் ஒருவர் அருகில் இருந்துள்ளார். இருப்பினும், அவரால் அடிப்பவர்களை தடுக்க இயலவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.

அடி வாங்கிய நபர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமையினை, முற்றுகையிட பொதுமக்கள் திரண்டனர். அந்த நபர் இறந்ததை அறிந்தவுடன் ஆத்திரத்தில் அருகில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும், மருத்துவமனையினை தாக்கி உடைக்க முயன்ற பொழுது, போலீசார் அவர்களைத் தடுத்தனர். அப்பகுதியில் உள்ள மக்கள், தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

HOT NEWS

S