காவல்நிலையத்தில், அப்பாவி ஒருவரை போலீசார் ஆட வைத்த வீடியோவானது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்திரப்பிரதேசத்தில், ஊரடங்கு உத்தரவானது கடுமையாகப் பின்பற்றப்படுகின்றது. வருகின்றே மே-17ம் தேதி வரை இந்த ஊரடங்கானது அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருகின்ற பொதுமக்களுக்கு, போலீசார் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
அதுபோல, போலீசார் வழங்கிய நூதன தண்டனையானது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அங்குள்ள எட்டவா மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில், போலீசார் ஒருவரை ஆடும்படிக் கூறுகின்றனர். அவரும், வலைந்து நெளிந்து எல்லாம் ஆடுகின்றார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது. இதனைப் பலரும், எதிர்த்தும் வருகின்றனர்.
A police post or chowki in @etawahpolice , in the times of #Lockdown2 . Chowki incharge has been removed after this video of him and other cops making this man dance to a Sapna Chaudhary song went viral . Reason unclear , some ‘suggestions’ man had violated lockdown ! pic.twitter.com/tb0LXeMp8d
— Alok Pandey (@alok_pandey) May 3, 2020