கர்தார்பூர் நுழைவு திறப்பு விழாவிற்கு செல்லும் மன்மோகன் சிங்!

09 November 2019 அரசியல்
kartarpur.jpg

பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள, கர்தார்பூர் பகுதியில் உள்ள குருத்துவாரா கர்தார்பூர் சாகிப் விழாவிற்கு, முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் ஆகியோர் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

இன்று காலையில், பிரதமர் மோடி திறந்து வைத்த பாதையின் வழியாக சென்ற அவர்கள், அங்குள்ள குருத்துவாராவிற்கு வழிபட சென்றுள்ளனர். இன்று மாலையில், பாகிஸ்தான் பிரதமர் அங்கு சென்று, அப்பகுதிக்கான பாகிஸ்தானின் பாதையினை வழிபாட்டிற்காக திறந்து வைக்கின்றார். இது குறித்து, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் டிவீட் செய்துள்ளார்.

HOT NEWS