மன்மோகன்சிங்கின் பாதுகாப்பு குறைப்பு! இசட் பிளஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது!

04 September 2019 அரசியல்
manmohansingh.jpg

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான, திரு. மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு, தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது. அவர் ராஜ்யசபாவின் உறுப்பினராக தற்பொழுது உள்ளார்.

இதனிடையே அவர், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து, கவலைத் தெரிவித்தார். மேலும், இந்திய பிரதமர் இதுகுறித்துக் கவனிக்காவிட்டால், கண்டிப்பாக பிரச்சனை மேலும் பெரிதாகும் எனவும் கூறினார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட உச்சகட்டப் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அவர் தற்பொழுது இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார். அவருக்கும், அவருடைய மனைவிக்கும், இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

HOT NEWS