இருதய வலி! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன் சிங்!

11 May 2020 அரசியல்
manmohansinghlatest.jpg

முன்னாள் இந்தியப் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர்.மன்மோகன் சிங், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

87 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு, ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு இருதய ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கான, அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து, அவருக்கு நேற்று இரவு 8.45 மணியளவில் திடீரென்று இருதயத்தில் வலி ஏற்பட்டு இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அவர் அவசர அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும், பயப்படும் விதத்தில் எதுவும் இல்லை எனவும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவராக இருக்கும் மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை, இந்தியாப் பிரதமராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் சேவை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS