ஐந்தரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கின்றீர்கள்! என்ன செய்தீர்கள்? மன்மோகன் சிங்!

18 October 2019 அரசியல்
manmohansinghdr.jpg

தொடர்ந்து எங்கள் ஆட்சியைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, கடந்த ஐந்தரை ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் எனக் கூறுங்கள் என, நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான திரு. மன்மோகன் சிங் பேசினார்.

அவர் பேசுகையில், தொடர்ந்து எங்கள் ஆட்சியைக் குறைக் கூறி, இந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க நினைக்கின்றனர். ஒரு விஷயத்தினைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். எங்களைக் குறைக் கூறுவதை விட்டுவிட்டு, இந்தப் பிரச்சனையை எப்படி, சரி செய்வது என்பதுப் பற்றி யோசியுங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த நாட்டினை நீங்கள் தான் ஆண்டு வந்தீர்கள். இந்தக் காலக் கட்டத்தில் எதையாதவது செய்து இருக்கலாம்.

நான் பிரதமராக பதவியேற்றப் பொழுது, என்னப் பிரச்சனை இருந்ததோ, அதேப் பிரச்சனை மீண்டும் வந்துவிட்டது. பொருளாதாரம் மற்றும் வங்கிப் பிரச்சனைகளைப் பற்றிக் குறைகூறுவதை விட்டுவிட்டு என்ன செய்தால், என்ன பலன் வரும் என யோசியுங்கள் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசுகையில், தற்பொழுது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். அதில், என்னையும், முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனையும் குற்றம் சாட்டியுள்ளார். அது குறித்து, நான் பதில் கூற விரும்பவில்லை எனவும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

HOT NEWS