வீடு திரும்பினார் மன்மோகன் சிங்! கொரோனாவும் இல்லை!

12 May 2020 அரசியல்
manmohansinghdr.jpg

நேற்று முன்தினம் திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங், தற்பொழுது வீடு திரும்பியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு, திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, இந்தியா முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அவசர அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய உடல்நிலை சீரான நிலையில், திடீரென்று அவருக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு கொரனா வைரஸ் தொற்று உள்ளதா என்றப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, அவர் தற்பொழுது வீடு திரும்பினார். இதனால், காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS