இன்று மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் தலைவருமான மக்கள் திலகம் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.
அவருடையப் பிறந்த நாளினையொட்டி, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னையில் உள்ள இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதற்குப் பின்னர், அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றார். பின்னர், மதியம் ராமவரம் தோட்டத்திற்குச் செல்லும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்குகின்றார்.
எம்ஜிஆரின் பிறந்தநாளினை, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆர் என்றாலே, கிராமத்து மக்கள் இன்னும் கொண்டாடுகின்றனர். அந்த அளவிற்கு, அவருடைய செல்வாக்கானது பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.