மிக்-29கே விமானம் விழுந்து நொறுங்கியது! விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

17 November 2019 அரசியல்
mig29kaccident.jpg

நம் இந்தியாவில் மட்டும், மாத்திற்கு ஒரு முறை இராணுவத்திற்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்குவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், இன்று மிக்-29கே ரக விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான, மிக்-29கே விமானம், இன்று காலை பயிற்சிக்காக ஹோல் தோபிலிம் கடற்படை விமானதளத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சிறிது நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது.

இதனைப் பற்றி, கடற்படைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்த விமானிகள், சுதாரித்துக் கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத கோவாவின் பகுதிக்குச் சென்றனர். இருப்பினும், விமானம் தன்னுடையக் கட்டுப்பாட்டினை இழந்து தரையில் மோதும் வேகத்தில் கீழே வந்தது. அப்பொழுது, அதிலிருந்து விமானிகள் பாராசூட் உதவி மூலம் குதித்து, உயிர் தப்பினர். தரையில் விழுந்த விமானம் நொறுங்கியதுடன் தீப்பிடித்து எரிந்தது.

HOT NEWS