நல்லாட்சி என விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும்! முக ஸ்டாலின் காட்டம்!

27 January 2020 அரசியல்
mkstalinspeech12321.jpg

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என, திமுக தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவரான விக்கிரமராஜாவின் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மண மக்களை வாழ்த்தி ஆசி வழங்கினார்.

அப்பொழுது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய அவர், பெண்களுக்கான சம உரிமையையும், சமூக நீதியையும் கற்றுத் தந்தவர் தந்தைப் பெரியார். தற்பொழுது அவருக்கே, அநீதி நிகழ்ந்து வருகின்றது. கலைஞரை எவ்வித அனுமதியும் இன்றி, கோபாலபுரத்தில் சந்திக்கும் நபர் என்றால் அது விக்கிரமராஜா தான். அந்த அளவிற்கு, தலைவர் அனுமதி வழங்கியிருந்தார்.

தமிழகத்திற்கு நல்லாட்சிக்கான விருது கிடைத்துள்ளது என முதல்வர் அடிக்கடி மார்தட்டிக் கொள்கின்றார். தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை, அடிக்க வேண்டும் என அவர் காட்டமாக பேசியுள்ளார்.

HOT NEWS