மோடியின் கையில் இருந்தது என்ன தெரியுமா?

13 October 2019 அரசியல்
modiacupunture.jpg

நேற்று சென்னை மாமல்லபுரத்தில், சீன அதிபருடன் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், காலையில், கோவளம் கடற்கரை ஓரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார் பிரதமர் மோடி.

அப்பொழுது, ஒரு பாறையில், அமர்ந்திருந்த பொழுது, கையில் ஒரு கட்டையை வைத்திருந்தார். இதுவும், சமூக வலைதளங்களில் வைரலானது. இது என்னவென்று, மோடியிடமே பலரும், டிவிட்டர் உட்பட பல சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர்.

இன்று காலை, அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் பிரதமர் மோடி. தன் கையில் இருப்பது அக்குபங்சர் ரோலர் என அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

HOT NEWS