பிளாஸ்டிக் இல்லா இந்தியா! மோடி வேண்டுகோள்!

26 August 2019 அரசியல்
modimankibat.jpg

நேற்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி, பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என, அனைவரும் சபதம் எடுக்க வேண்டும் என நாட்டின் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இந்தாண்டு காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, தூய்மை இந்தியாத் திட்டத்தின் மூலம், கழிப்பறை இல்லாத இந்தியாவாகக் கொண்டாடப்பட உள்ளது. மேலும், அத்துடன் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். இந்தத் தீபாவளிக்குள் பிளாஸ்டிக்குகளை நாம் பாதுகாப்பாக ஒழிக்க வேண்டும். இதற்காக, நாட்டில் உள்ள அனத்து, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி, மற்றும் எரிபொருளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து இந்தியர்களுக்கும், நாட்டின் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

HOT NEWS