நேற்று, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தியா முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை கொண்டாட ஜம்மூ காஷ்மீரின் ராஜோரி பகுதிக்கு சென்ற மோடி, அங்குள்ள இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
பின்னர், அவர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். அங்கு அவர்களுடன் பேசுகையில், நம் நாட்டில் அனைவரும் தீபாவளியை, அவரவர் குடும்பங்களுடன் கொண்டாடி வருகின்றனர். நானும் என் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடவே வந்தேன். வீரர்களுடையத் தியாகம் என்பது இன்றியமையாத ஒன்று. அவர்கள் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் உலக தரத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.