இன்று காலை, மாமல்லபுரத்தின் கடற்கரையில், நடைபயிற்சி செய்த பிரதமர் மோடி, அங்குள்ள குப்பைகளை எல்லாம் சேகரித்தார். இந்த வீடியோ, தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
மாமல்லபுரத்தில், சீன அதிபர் ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இரண்டாவது முறைசாராப் பேச்சுவார்த்தைக்காக வருகைத் தந்துள்ளனர். நேற்று, அவர்கள் அங்குள்ள சிற்பங்களையும், பின் நடந்த கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர். இரவு விருந்திலும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலையில், கடற்கரை ஓரத்தில், நடைபயிற்சி செய்த மோடி, அங்கு கடற்கரை மணலில் இருந்த, குப்பைகளை எல்லாம் எடுத்து, சேகரித்தார். பின்னர் அங்கிருந்த ஓட்டல் ஊழியர் ஜெயராஜ்ஜிடம், வழங்கி குப்பைத் தொட்டியில் போடச் சொன்னார்.
பின்னர், கடற்கரைப் பகுதியில், நடைபயிற்சி செய்தார். இதனை, தற்பொழுது சமூக வலைதளங்களில் பாராட்டித் தள்ளிவிட்டனர். இது இன்றையப் பேசுபொருளாகவே மாறியுள்ளது.