இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக, சவுதி அரேபியா கிளம்புகின்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
சவுதியில் நடைபெற உள்ள, எதிர்கால முதலீடு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு வர்த்தகம் குறித்துப் பேச உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு முதலீடுகள் குறித்துப் பேசும் மோடி, பின்னர், சவுதியின் அரசர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்துப் பேச உள்ளார்.