இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் விக்ரம் லேண்டர் விண்கலம், நிலவின் தென்பகுதியில் உள்ள மான்சினஸ்-சி மற்றும் சிம்பிலியஸ்-எஸ் என்ற பகுதிகளுக்கு இடையே தரையிறங்க வேண்டிய தருணத்தில், நூலிழையில் தோல்வியில் முடிந்தது.
உலகளவில் டிவிட்டர் டிரெண்டிங்கில், இருந்து வந்த இந்த நிகழ்வினை, இந்தியர்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உட்பட பல உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தன.
இருப்பினும், இந்த முயற்சித் தோல்வி அடைந்தது. இதனால், இஸ்ரோவில் இருந்து பிரதமர் மோடி வெளியில் வரும் பொழுது, பின்னால், வந்த இஸ்ரோவின் தலைவர் டாக்டர் திரு.சிவன் கண்கலங்கினார். அவரைக் கட்டியணைத்த மோடி, அவருக்கு ஆறுதல் கூறினார். அப்பொழுது, அவரும் எதிர்ப்பாராத விதமாக கண்கலங்கிவிட்டார்.