உலகப் பிரசித்திப் பெற்ற டிஸ்கவரி நிறுவனத்தின் நிகழ்ச்சியான மேன் வெர்ஸ் வோயில்ட் நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியை நேற்று டிஸ்கவரி நிறுவனம் ஒளிபரப்பியது.
இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் இரண்டாம் இடத்திலும், டிரெண்டிங்ல் இருந்து அசத்தியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த 18 ஆண்டுகளில் இப்பொழுது தான் விடுமுறை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், அவர் பேசுகையில், இமயமலைக்குச் செல்லும் பொழுது, ஆன்மீகமும், இயற்ககையும், என்னை அதியசத்தில் ஆழ்த்தத் தவறுவதில்லை எனக் கூறினார்.
இதனை வைத்துக் கொள்ளுங்கள், மிருகங்கள் தாக்கினால், இதனை வைத்துத் தாக்கிக் கொல்லலாம் என பியர் கிர்ல்ஸ் கூறினார். அதற்கு பதிலளித்த மோடி, தன்னுடையக் கலாச்சாரம், உயிர்களை அழிக்க அனுமதிப்பதில்லை எனக் கூறினார்.