கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அன்று, டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் நடத்தும், மேன்வெர்ஸஸ்ஓயில்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் நம் பாரதப் பிரதமர் திரு.மோடி கலந்து கொண்டதனை ஒளிபரப்பினர்.
இந்த நிகழ்ச்சி தற்பொழுது உலகின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக மாறியுள்ளதாக பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள டிவிட்டில், இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி உலகளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக சூப்பர் பவுல் 53 எனும் நிகழ்ச்சியானது இருந்தது. அதனை 330 கோடி பார்வையாளர்களைப் பெற்றதாக கணிக்கப்பட்டுள்ளது. மோடி டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதனை 360 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
உலக அரசியில் தலைவர்களில், தற்பொழுது நம் நாட்டின் பிரதமர் திரு.நரேந்திர மோடியே நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். இந்நிலையில், டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், டிவி நிகழ்ச்சியிலும் இவருடைய நிகழ்ச்சியே நம்பர் ஒன்றாக மாறியுள்ளது.