இந்தியாவின் மதிப்புப் பல மடங்கு உயர்ந்துள்ளது! மோடி பெருமிதம்!

29 September 2019 அரசியல்
modiwelcome.jpg

இந்தியாவின் மதிப்பு, சர்வதேச அரங்கில் பல மடங்கு உயர்ந்துள்ளது என, இந்தியா திரும்பிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒரு வார அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு, டெல்லி விமான நிலையத்தில் பாஜக தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்பொழுது அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு பதவியேற்ற பொழுது ஐநா சென்றதற்கும், தற்பொழுது சென்றதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இந்தியாவின் மதிப்பு, சர்வதேச அரங்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தம்மீது அன்பு மழையைப் பொழிந்த, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

HOT NEWS