இன்று நடைபெற்ற ஐநா சர்வதேச சிறப்புக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி பேசினார். அதில், பருவநிலை மாற்றம் குறித்துப் பேசினார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஹோவ்டிமோடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று பருவநிலை மாற்றம் குறித்த, ஐநாவின் சர்வதேச கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, பேசிய பிரதமர் மோடி, இந்தியா தற்பொழுது ஒரு குழுவினை உருவாக்கியுள்ளது. அதில், அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என, அனைத்து நாட்டுத் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
இது பேசுவதற்கான நேரம் இல்லை, நாம் செயல்படுவதற்கான நேரம். இந்தியாவில் பல லட்சம் பேருக்கு, இயற்கை எரிவாயு இணைப்பினை வழங்கியுள்ளோம். இப்பொழுது, நாம் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். படிக்கும் கல்வி முதல், வாழ்க்கை முறை வரை, அனைத்திலும் மாற்றம் வேண்டும். அப்பொழுது தான், இந்த இயற்கைப் பருவ நிலை மாற்றத்தை நம்மால், கட்டுப்படுத்த முடியும் எனப் பேசினார்.
இதற்குப் பல உலகநாடுகளின் தலைவர்களும், தங்களின் ஆதரவினை கைதட்டி தெரிவித்தனர்.