நகைச்சுவையாகப் பேசி, மக்கள் மனதைக் கவர்வதில் மோடிக்கு நிகர் யாரும் இல்லை எனலாம். அந்த அளவிற்கு, கிண்டல் கலந்த பேச்சிற்கு சொந்தக்காரர்.
தற்பொழுது நாடளுமன்றப் பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில், இன்று மாலை சுமார் 40 நிமிடங்களாக மோடி பேசினார். அப்பொழுது, ராகுல் காந்தி எழுந்து சில கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தார். அதற்கு, பாஜகவினர் தொடர்ந்து கூச்சல் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி அமர்ந்தார். அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, 40 நிமிடங்களாக பேசிக் கொண்டு இருக்கின்றேன். தற்பொழுது தான் மின்சாரம் சென்றுள்ளது. ஒரு சில ட்யூப்லைட்டுகளுக்கு என்றுக் கூறினார்.
இதனால், நாடாளுமன்றமே மொத்தமாக சிரித்து விட்டது. ஏன், காங்கிரஸ் கட்சியினர் பலரும் சிரித்துவிட்டனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் முகத்தில் ஈ ஆடவில்லை. இதனை தற்பொழுது நெட்டிசன்கள் கேலியாக பகிர்ந்து வருகின்றனர்.