பிரேசில் கிளம்பும் பிரதமர்! 13 மற்றும் 14ம் தேதி அரசு முறைப் பயணம்!

08 November 2019 அரசியல்
modimankibat.jpg

இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக, நவம்பர் 13 மற்றும் 14ம் தேதி நடைபெறும் முக்கியக் கூட்டங்களில் பங்குபெறுவதற்காக, பிரேசில் நாட்டிற்குச் செல்ல உள்ளார் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி.

வருடா வருடம் பிரிக்ஸ் மாநாடானது, நடைபெற்று வருகின்றது. இந்தாண்டு, பிரிக்ஸ் உச்சிமாநாடானது, பிரேசில் நாட்டில் வரும் நவம்பர் 13ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளார்.

நவம்பர் 13ம் தேதி காலை, பிரேசில் தலைநகர் ரியோ டீ ஜெனீரோவினை அடைகின்றார். பின்னர், அங்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதமர், 14ம் தேதி மாலையில் இந்தியாவிற்கு திரும்ப கிளம்புவார்.

HOT NEWS