காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடும் விதமாக, நேற்று மாலை பாலிவுட் பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதில், பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாரூக் கான், அமீர் கான் உட்பட பலப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள், பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அப்பொழுது, அவர்கள் முன்னிலையில் பேசிய மோடி, படைப்பாற்றல் கொண்ட உங்களுடைய சேவை மிகவும் அளப்பறியது. அப்படிப்பட்ட உங்களுடைய சேவை, காந்தியின் கருத்துக்களை திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் தெளிவாக எடுத்துரைத்து வருகின்றன என்றார். மேலும், சீன அதிபரை சந்தித்தப் பொழுது, அவர் டங்கல் படத்தினைப் பாராட்டிப் பேசியதாகவும் கூறினார்.
இதனையடுத்துப் பேசிய ஷாரூக் கான், காந்திஜியின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாட நினைத்தது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. அவர் நம் அனைவருக்குமே தந்தையாவார். நாங்கள் மேலும், சிறந்த படங்களை அளிப்போம் என நம்புகிறேன் எனவும் கூறினார். பின்னர், அனைத்துப் பிரபலங்களும், மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.