4 கோடி ரூபாய் மொய் வசூல்! புதுக்கோட்டை விவசாயி சாதனை!

17 May 2019 சினிமா
pudhukottaimoivirundhu.jpg

புதுக்கோட்டை பகுதியில் உள்ள, கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடத்திய மொய் விருந்தில், 4 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

சுமார் ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு பறிமாறப்பட்டுள்ளது. மேலும், 50,000க்கும் அதிகமான பத்திரிக்கைகள் அடித்து விநியோகித்துள்ளனர். மேலும், 200க்கும் அதிகமான பிளக்ஸ் போர்டுகள், கட்அவுட்கள் என, மிகப் பெரிய அளவில் இந்த மொய் விருந்து நடந்துள்ளது.

இதில் 100க்கும் அதிகமானவர்கள் சமையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தனியார் வங்கியிலிருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, மொய் வாங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரிய அளவிலானப் பந்தல் போடப்பட்டு தடாபுடலாக விருந்து நடந்துள்ளது.

அசைவ மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டு, விருந்து சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த விருந்திற்கு தனியார் மையத்தின், பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்தனர்.

இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் மொய் பணமாக வசூலாகி உள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு வசூலான, மிகப் பெரிய மொய் பணமாக இந்த விருந்து உள்ளது.

HOT NEWS