இறந்து போன பிச்சைக்காரரிடம், பத்து லட்ச ரூபாய்! அதிர்ந்த போலீஸ்!

07 October 2019 அரசியல்
beggar.jpg

மும்பையில் விபத்தில் இறந்த பிச்சைக்காரரிடம் இருந்து, சுமார் பத்து லட்ச ரூபாய்யை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அக்டோபர் நான்காம் தேதி அன்று, மும்பையில் உள்ள கோவன்டி மற்றும் மான்குர்த் இரயில் நிலையங்களுக்கு இடையே, இரயில் தடத்தினைக் கடக்கும் பொழுது, இரயில் மோதி பலியானார்.

மும்பையின் தென்கிழக்கு கோவன்டியில் உள்ள குப்பத்துப் பகுதியில், தனியாக வசித்து வந்தார் பிர்ஜூ சந்திரா ஆசாத். அவர் நீண்ட நாட்களாக, தனியாக பிச்சை எடுத்து வந்தார். இவர், இந்த விபத்தில் பலியான பின், அவருடைய உடலைப் பரிசோதனை செய்த போலீசார், அதிர்ச்சியில் உறைந்தனர்.

அவரிடம், பல வங்கிக் கணக்கு இருந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த வங்கிகளில் சுமார் 8.77 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. மேலும், தன்னிடம் 1.5 லட்சம் மதிப்பிலான, சில்லறை நாணயங்களையும் வைத்திருந்திருக்கிறார் அந்த பணக்கார பிச்சைக்காரர்.

தற்பொழுது, அந்த சில்லறைகளை எடுத்துக் கொண்ட போலீசார், அதற்குப் பதிலாக நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளனர். ஒரு சந்தேகம், அவர் பிச்சைக்காரரா அல்லது பணக்காரரா?

HOT NEWS