மும்பையில் தற்பொழுது வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், பருவமழையானது அதிக தீவிரமாகப் பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் ஆறாக ஓடுகின்றது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 585.2 மிமி மழையானது பதிவாகி உள்ளது. மேலும் இந்த மழையானது தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி வருகின்றது.
இதனால், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே இது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும், தொடர்ந்து மழை பெய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும், பொதுமக்களின் நிலைக் குறித்தும் ஆலோசனை செய்து உள்ளார்.