இந்தியா முழுவதும் கொரோனாவால் கதறிக் கொண்டு இருக்கையில், மும்பையில் உள்ள போலீஸ்காரர் அவர் வாழ்க்கைக் குறித்து திணறிக் கொண்டு இருக்கின்றார்.
மும்பையின் தாதர் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வேலை செய்து வருகின்றார் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் (பெயர் கூறப்படவில்லை). தனக்கு 30 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்ய யாரும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அங்கிருந்து மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏறிவிட்டார். அவரைக் கீழே கொண்டு வரும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அவருடைய காவல்துறை நண்பர்கள், தீயணைப்புத் துறையினர் உட்படப் பலரும் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் மனம் மாறி தற்கொல முடிவினைக் கைவிட்டுள்ளார். இச்சம்பவம், காரணமாக அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.