ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு உட்பட பல கலைஞர்கள் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம், வருகின்ற ஜனவரி 9ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசைக்கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளது. இது குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள சங்கத் தலைவர் தினா வருத்தம் தெரிவித்தும் உள்ளார்.
அவர் அறிக்கையில், கடந்த படத்தின் பொழுதே, இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் எனக் கோரிக்கை விடுத்தோம். அவரும் அடுத்தப் படத்தில் வாய்ப்பளிக்கின்றேன் எனக் கூறினார். அதே போல், தர்பார் படத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அனிருத் வழங்கவில்லை. அவர் இசைக் கலைஞர்களை ஏமாற்றிவிட்டார்.
இது குறித்து, அனிருத்திடம் பேசியுள்ளோம். இந்த விஷயம் ரஜினிகாந்திற்கும் தெரியும். இதற்கு நான் என் சார்பிலும், சங்கத்திலும் கடும் கண்டனத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.