காசியின் கூட்டாளி கைது! முக்கிய ஆதாரங்கள் சிக்கின?

24 June 2020 அரசியல்
nagercoilkasi.jpg

நாகர்கோவில் காசியின் முக்கிய நண்பரான தினேஷ் என்பவரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் மாவட்டத்தினைச் சேர்ந்த காசி என்ற நபர், நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி பல லட்ச ரூபாயினை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பலப் பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து, அவர்களை பிளாக் மெயில் செய்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கில், காசியின் லேப்டாப்கள் மற்றும் மொபைல் போன்களைப் போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில், காசிக்கு பெண்களை ஏமாற்ற உதவியாக இருந்தவர்களையும் சேர்த்து, போலீசார் தேட ஆரம்பித்தனர். அவர்களைத் தேடி வந்த நிலையில், இந்த வழக்கானது, சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால், இந்த வழக்கானது மிகவும் விரைவாக விசாரிக்க ஆரம்பிக்கப்பட்டது. இதனிடையே, காசியின் முக்கியக் கூட்டாளியான தினேஷ் என்பவரை, தற்பொழுது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து, ஸ்மார்ட்போன் உள்ளிட்டவைகளைக் கைப்பற்றி உள்ளனர்.

இந்த போனில், பலப் பெண்களின் ஆபாசப் படங்களும், புகைப்படங்களும் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினேஷினை விசாரித்தால், இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் பற்றி தெளிவாகத் தெரிய வரும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS