வெளிநாட்டுக் கூட்டாளி மூலம் விளையாட்டுக் காட்டும் காசி! வீடியோவை வெளியாட்டான்!

24 May 2020 அரசியல்
kasiarrested.jpg

நாகர்கோவில் மாவட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள காசி, தற்பொழுது வெளிநாட்டில் தங்கியிருக்கும் தன்னுடையக் கூட்டாளி மூலம், சில்மிஷத்தை காட்ட ஆரம்பித்துள்ளான்.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி, அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் மாவட்டத்தினைச் சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டான். பொறியியல் பட்டதாரி எனக் கூறும் காசி, தன்னுடைய புகைப்படங்கள், ஜிம் வீடியோக்கள் மூலம் பெண்களை கரெக்ட் செய்துள்ளான். அவர்களிடம் இருந்து பல லட்ச ரூபாயினை அவன் பறித்துள்ளான்.

இந்த சூழ்நிலையில், அவனைக் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களுடைய விசாரணையில், அவன் சரியானப் பதிலை அளிக்க மறுப்பதாகவும், முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களை அவன் அளிப்பதாகவும், நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தார்.

இந்நிலையில், அவன் போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக பதுக்கி வைத்திருந்த லேப்டாப்பினை, தன் நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அதிலுள்ள வீடியோக்களை வெளிநாட்டில் தங்கியுள்ள காசியின் நண்பரும், காசிக்கு உதவியாக இருந்ததாக கூறப்படும் கௌதம் என்பவரின் உதவியுடன், அந்தப் பெண்களின் வீடியோக்களை கொஞ்சம் கொஞ்சமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் தெரிகின்றது.

இதனை போலீசார் எதிர்பார்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் காசியின் நண்பன் கௌதம் பற்றியத் தகவலை அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்பொழுது, ஊரடங்கு அமலில் உள்ளதால், அதனை வேகமாகச் செய்ய இயலவில்லை. ஊரடங்கு முடிந்த உடன், இந்த வேலைகள் வேகமாக நடைபெறும் எனத் தெரிகின்றது.

இப்படிப்பட்ட சூழலில், தான் யாரையும் பணம் வாங்கி ஏமாற்றவில்லை எனவும், அவர்கள் தான் தாமாக முன்வந்து பணம் வழங்கியதாகவும் காதல்மன்னன் காசி தெரிவித்துள்ளான். (காண்ஸ்டெபிள் இவனை கூட்டிட்டுப் போய் அறுத்துருன்னு என்கவுன்டர் ஏகாம்பரம் கூறுவது தான் ஞாபகம் வருகின்றது).

HOT NEWS