காசியின் சம்பவம்! குண்டர் சட்டம் பாய்ந்தது! பெரிய ஆட்களுடன் தொடர்பு!

05 May 2020 அரசியல்
nagercoilkasi.jpg

காதல் மன்னன் காசியின் மீது, தற்பொழுது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பள்ளியில் படிக்கும் பெண்கள் முதல், மருத்துவப் பெண் வரை, அனைத்து வயது பெண்களுடனும் காதல் என்ற போர்வையில், ஏமாற்றியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு நாகர்கோயில் பகுதியினைச் சேர்ந்தவர் காசி. இவர், தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில், தன்னுடைய ஜிம் போட்டோக்கள், வீடியோக்களை அப்லோட் செய்து, தன்னுடைய போலி கணக்குகள் மூலம், அவருடைய போட்டோக்களுக்கு அவரே லைக் செய்து வந்தார். மேலும், பெண்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய கணக்குகளுக்கு சென்று ஆதரவாக கமெண்ட் செய்வது உள்ளிட்டவைகள் மூலம், பெண்களுடன் பழக ஆரம்பித்தார்.

இவர் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்தவராக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தும் உள்ளார். இந்நிலையில், மருத்துவப் பெண் ஒருவரை இவர் ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது. அந்தப் பெண் போலீசில் புகார் கொடுத்தன் காரணமாக, அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மேலும் பலப் பெண்கள் புகார் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அவர் மீது புகார் பதிவு செய்துள்ள நாகர்கோயில் காவல் நிலையமானது, 9498111103 என்ற எண்ணினைத் தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரினை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள காசி, தற்பொழுது மூன்றாவது நாள் போலீசில் காவலில் உள்ளார். இந்நிலையில், அவர் போலீசாருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுப்பதாகவும், போலீஸ் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் தன்னுடன் பழகியப் பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளை தன்னுடைய லேப்டாப்பில் வைத்திருந்திருக்கின்றார்.

அதனை கைப்பற்றிய போலீசார், தற்பொழுது விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அவருடன் பெரிய அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை விசாரிக்க ஏழு நாட்களுக்கு அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். இந்த சூழ்நிலையில் கந்து வட்டி வழக்கு, பெண்களை ஏமாற்றிய புகார் உள்ளிட்ட மூன்று வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

HOT NEWS