நாமக்கல்லில் உள்ள ஆற்றில் குழந்தை அடித்துச் செல்லப்பட்டது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்தக் குழந்தையின் சப்தத்தைக் கேட்டு, உடனடியாக, நீரில் குதித்து அக்குழந்தையை மீட்டனர்.
இருப்பினும், அக்குழந்தை மூர்ச்சையாக இருந்ததால், அக்குழந்தையைக் காப்பாற்ற தொடர்ந்து விடாமல் முதலுதவி செய்தனர். அக்குழந்தை இவர்களின் முயற்சியால் எழுந்தது. பின்னர், அழ ஆரம்பித்து விட்டது. அக்குழந்தையைத் தூக்கி, அவர்கள் ஆறுதல் கூறிய வீடியோ, தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாமக்கல்லில் ஆற்றில் அடித்த செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்றும் காவலர்கள்..
— Prabhakaran Kamaraj (@wolfprabhakaran) August 3, 2019
உடம்பெல்லாம் சிலிர்த்திருச்சி ❤ pic.twitter.com/AWye6pUdKu