நட்புன்னா என்ன தெரியுமா! திரை விமர்சனம்!

17 May 2019 சினிமா
natpunnaennatheriyuma.jpg

ரேட்டிங் 2.6/5

பாக்கியராஜ் படமான, இன்று போய் நாளை வா! படத்தை சுட்டு, கண்ணா லட்டுத் திண்ண ஆசையா! படத்தை எடுத்தனர். கணா லட்டுத் திண்ண ஆசையாப் படத்தைச் சுட்டு, நட்புன்னா என்ன தெரியுமா, படத்தை எடுத்துள்ளனர் அவ்வளவு தான்.

சின்னத் திரையில் வெற்றிகரமாக ஓடிய, சரவணன் மீனாட்சித் தொடரில், நல்ல பெயர் பெற்ற நடிகர் கவின், இத்திரைப்படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளார். துணை நடிகர்களாக, ராஜூ மற்றும் அருண் ராஜகாமராஜ் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக, நடித்துள்ளார்.

பெரிய அளவில் டிவிஸ்ட்லாம் இல்லை. கவின், அருண் மற்றும் ராஜூ ஆகியோர் பால்ய நண்பர்கள். இருவரும் படித்து முடித்துவிட்டு கல்யாணத்திற்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும், வேலையை செய்து கொண்டு, இருக்கின்றார்கள். ஒரு நாள், ரம்யா நம்பீசனைப் பார்க்கின்றார் நாயகன் கவின். அவ்வளவு தான். காதல் வந்துவிட்டது. இதனிடையே, நடிகர் ராஜூவும் ரம்யாவை காதலிக்கிறார். அருண், ராஜூவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். இதில் யார் காதல் ஜெயித்தது. நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் மீதிக் கதை.

படத்தின் இரண்டாம் பாதி, நன்றாக ரசிக்கும் விதத்தில் எடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் பாடல்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு வேளை, படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தால், கண்டிப்பாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்து இருக்கும் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.

என்ன ரம்யா நம்பீசனுக்குத் தான், கொஞ்சம் வயசான சாயல் தெரியுது. மத்தப்படி, ரம்யாவை அனைவரும் ரசிக்கலாம். புதுமுக நடிகர் ராஜூ, புதுமுகம் மாதிரியே இல்லை. அவ்வளவுப் பிரமாதமான நடிப்பு. உண்மையைச் சொன்னால், கவினை விட இவருக்குத் தான் படத்தில் அதிக இடம். மொத்தத்தில் நட்புன்னு, என்ன தெரியுமா? வெற்றி பெறுமா?

HOT NEWS

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

24 May 2019 அரசியல்
modi1.jpg

ஈரானிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. இதனை சற்றும் மதிக்காத இந்தியா ஈரானிடம் பெருமளவிலான கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டது.

இதனால், இந்தியா மீதுப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என, அமெரிக்க மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், வியாபாரத்தின் காரணமாக இன்று வரை பொருளாதாரத் தடை விதிக்கப்படவில்லை.

மேலும், தற்பொழுது புதிய தகவல் பரவி வருகிறது. அதன் படி, தற்பொழுது, இந்தியா ஈரானிடம், டாலரில் எண்ணெய் வாங்காமல் ரூபாயில் வாங்க உள்ளதாக, தகவல் பரவியுள்ளது. பாதி ரூபாயாகவும், மீதிப் பணத்திற்கு உற்பத்தி மற்றும் மூலப் பொருட்கள் மூலம் ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

ஈரான் தற்பொழுது, குறைந்த விலைக்கு எண்ணெய் விற்கிறது. மேலும், ஈரானிடம் எண்ணெய் வாங்கி 60 நாட்களுக்குப் பின், பணம் தந்தால் போதும் என்ற காரணங்களுக்காக, இந்தியா தற்பொழுது ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

HOT NEWS