இந்த ஆண்டு நடைபெற வேண்டிய, மருத்துவ மாணவர்களின் சேர்கைக்கான நீட் தேர்விற்காக தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் காரணமாக, மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், பல மாநிலங்களில் +12 தேர்வுகள் உட்பட, பல பள்ளித் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், கல்லூரிகளில் அவர்கள் சேர்வதில் பிரச்சனைகள் உருவாகி உள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு, புதிய தேர்வு தேதியினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற ஜூலை 26ம் தேதி அன்று, மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கான நீட் தேர்வானது, நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பொறியியல் படிப்பிற்காக நடத்தப்பட உள்ள ஜேஇஇ நுழைவுத் தேர்வானது ஜூலை 18ம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், மாணவர்கள் தற்பொழுது தயாராகும்படியும், தேர்விற்கு விண்ணப்பிக்கும் படியும் கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.