தேனியில் மாணவன் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், தற்பொழுது அவர் மாட்டிக் கொண்ட நிலையில், தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இருவர் தங்களுடையப் புகைப்படத்தினை மாற்றி, கல்லூரியில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அந்த கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.