தேர்வு எழுதும் முன், தலைமுடியை நோண்டுதல், பூவினை கழற்றி வீசுதல், உடைகளை சோதனை செய்தல் உட்பட பல சோதனைகளைச் செய்கின்றனர். ஆனால், தேர்வு எழுதுபவர் உண்மையில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை, கண்கானிக்கத் தவறி விடுகின்றனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில், சேர்ந்த மாணவன் உதித் சூர்யாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை முன்னிட்டு, அந்த மாணவன் தலைமறைவானான்.
தற்பொழுது கிடைத்தத் தகவலின் படி, உதித் சூர்யா மும்பையில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கினை, சிபிசிஐடியின் விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, தெரிகின்றது.