நீட் தேர்வு குளறுபடி! சிக்கும் மேலும் பலர்! படிப்பிலும் ஊழல்!

29 September 2019 அரசியல்
neet.jpg

நீட் தேர்வு ஆரம்பித்தது முதல் தற்பொழுது வரை, அத்தேர்வு சர்ச்சைகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கின்றது. இதுவரை, அந்த நீட் தேர்வால் பயனடைந்தவர்களைக் காட்டிலும், தற்பொழுது தமிழகத்தில் நீட் தேர்வினால் சிறைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகிறது.

தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவன் உதித் சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்ததாக, சிபிஐ விசாரணை செய்து வருகின்றது. இந்நிலையில், மேலும் பலர் இந்த விவகாரத்தில் ராகுல், பிரவீன் மற்றும் அபிராமி என்ற மாணவர்கள் மூன்று பேரையும் சிபிஐ கைது செய்து விசாரணை செய்து வருகின்றது.

அதே போல், எஸ்ஆர்எம், சத்யசாய் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர்களை நேரில் விசாரணைக்கு ஆஜராகவும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

HOT NEWS