அயோத்தில் கட்டப்பட உள்ள, பிரம்மாண்டமான இராமர் கோயிலினை முன்னிட்டு, அங்கு 500 கோடி ரூபாய் மதிப்பில், புதிய விமான நிலையம் கட்டப்படும் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், இராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது, இந்திய அரசாங்கம் நியமித்த அறக்கட்டளை உறுப்பினர்கள், கோயிலினைக் கட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அயோத்தியில், பிரம்மாண்டமாக இராமர் கோயில் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.
அயோத்திக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், அதன சுற்றுலா தளமாக மேம்படுத்த 85 கோடி ரூபாயும், புதிய விமான நிலையம் கட்டுவதற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இங்குள்ள துளசி பவனை சீரமைக்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.