தமிழக தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் நவம்பர் 25ம் தேதி வெளியா உள்ளது. இதனை மாநிலத் தேர்தல் ஆணையத் தலைவர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 18ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் மேலும், பெயர் சேர்ப்பதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், வரும் நவம்பர் 25ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தெரிவித்தார்.
பொதுவாக தேர்தல் நடத்துவதற்கு முன் தான் இத்தகைய செயல்களில் தேர்தல் ஆணையம் ஈடுபடும். தற்பொழுது, வாக்காள் பட்டியல் வெளியாகும் என்ற அறிவிப்பு வர உள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.