சென்னையில் 500 கோடி மதிப்பில் ஐந்து மேம்பாலங்கள்!

19 March 2020 அரசியல்
edappadipalanisamy.jpg

சென்னையில், விரைவில் 500 கோடி மதிப்பில், புதிதாக ஐந்து மேம்பாலங்கள் உருவாக்கப்படும் என, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. அதில், எதிர்கட்சியினரின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி. அவர் பேசுகையில், இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகமே முதன்மை மாநிலம் என்றப் பெருமையையும், மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.

இதற்கு சாலைக் கட்டமைப்பு வசதிகளும் முக்கியமான ஒன்றாகும். சாலைகள் வசதியில் தமிழகத்திற்கு ஈடு இணையான மாநிலம் இல்லை. சுமார், 66 ஆயிரத்து 39 கிலோ மீட்டர் பாதையினை, நெடுஞ்சாலைத்துறைக் கொண்டுள்ளது.

சென்னையின் தகவல் தொழில்நுட்ப சாலையின் பிரதனமானதாக இருக்கும் ஐந்து சந்திப்புகளிலும், 500 கோடி மதிப்பில் புதிதாக ஐந்து மேம்பாலங்கள் கட்டப்படும் எனவும் அவர் கூறினார். மேலும், இந்த ஆண்டு முடிக்கப்பட உள்ள சாலைப் பணிகள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

HOT NEWS