வாக்கி-டாக்கி வாங்கியதிலும் முறைகேடு! வருமான வரித்துறையினர் விசாரணை!

08 February 2020 அரசியல்
walkietalkie.jpg

காவல்துறை அதிகாரிகளுக்கு, வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோரின் வீடுகளில், தற்பொழுது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காவல்துறையினருக்கு, வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்ற புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு, தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய காவல் துறையினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், தற்பொழுது வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சுமார், 100க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே சமயத்தில் சோதனை நடைபெற்று வருகின்றது.

HOT NEWS