நியூசிலாந்து எரிமலை வெடிப்பு! 7 பேர் பலி!

11 December 2019 அரசியல்
newzealandvolcano.jpg

நியூசிலாந்தில் உள்ள வொயிட் தீவு எரிமலை தற்பொழுது வெடித்துள்ளது. அதிலிருந்து, கரும்புகையானது, பல அடி உயரத்திற்கு சீறிப் பாய்ந்து வருகின்றது. கடும் புகை, சாம்பல், மாக்மாவின் காரணமாக, பொதுமக்கள் எரிமலைப் பகுதியினை நெருங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப் பயணிகள் வொயிட் தீவிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த எரிமலை வெடித்துள்ளதாக அத்தீவு மக்கள் கூறுகின்றனர்.

நேற்று வெடிக்க ஆரம்பித்ததில் இருந்து, தற்பொழுது வரை சுமார் 7 பேர் இந்த எரிமலை வெடிப்பினால் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் எட்டுப் பேரைக் காணவில்லை எனவும், அத்தீவு போலீசார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS