தமிழகத்தில் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என கோவை நகரம் முழுவதும், தேசியப் புலனாய்வுத் துறை, உளவுத் துறை, தமிழக காவல்துறை என அனைவருமே சல்லடைப் போட்டு அலசி வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது கோவையில் இருந்து, 5 பேர் ஐஎஸ் அமைப்பிற்கு உதவி வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இன்று காலை 5 மணி முதல், தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், கோவையின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உமர் பாருக், ஜனாபர் அலி, சமீனா முபீன், முகமது யாசீர், சதாம் உசேன் என்பவர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். பின்னர், கோயம்புத்தூர் உக்கடம், பிலால் நகர் உட்பட பல பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.