நடந்து முடிந்தது குமாரசாமியின் மகன் திருமணம்!

18 April 2020 அரசியல்
kumaraswamymarr.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டத் திருமணங்கள் உள்ளிட்ட விஷயங்களுக்கு மட்டும், அரசாங்க அனுமதியுடன் நடத்த உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. மேலும், பெரிய அளவில் கூட்டம் சேரக் கூடாது எனவும், மணப்பெண், மணமகள் உறவினர்களைத் தவிர வேறு யாரையும் அழைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிக்கில் குமாரசாமியின் மகனுக்கும், முன்னாள் வீட்டுநலத்துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணப்பாவின் மகள், ரேவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ராமநகரா மாவட்டத்தில் உள்ள பெங்களூரூ-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பார்ம் ஹவுசில் நிச்சயிக்கப்பட்டபடி, நடைபெற்றது.

இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். இதனால், இது தற்பொழுது சர்ச்சையாகி உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட கார்கள் இந்த கல்யாணத்திற்கு வந்திருந்தன. குமாரசாமியின் கூற்றுப்படி, இந்தக் கல்யாணத்திற்கு மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS