பொருளாதாரத்தை முன்னேற்ற உறுதி பூண்டுள்ளேன்! நிர்மலா சீதாராமன் உறுதி!

20 October 2019 அரசியல்
nirmalaseetharaman.jpg

நாட்டின் பொருளாதார மந்தநிலை நீடித்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்ற உறுதி பூண்டுள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்று முடித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உலக வங்கி மற்றும் ஐஎம்எப் கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் குறித்து, விவாதித்தாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், பொருளாதார மந்தநிலை குறித்து விவாதித்தாகவும், ஒரு சில நாட்டுப் பிரதிநிதிகள் இது குறித்து வேதனை தெரிவித்ததாகவும் பேசினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டியவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என்ற அவர், வரும் 2019-2020ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 3.3% இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் 2019-2020 ஆண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, ஐஎம்எப் கூறியுதையும் எடுத்துரைத்தார்.

HOT NEWS