உலகின் 34வது சக்தி வாய்ந்தப் பெண்மணியாக மாறியுள்ள சீதாராமன்!

16 December 2019 அரசியல்
nirmala.jpg

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில், 34வது இடத்தில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார்.

வருடா வருடம் உலகின் சக்தி வாய்ந்தப் பெண்மணிகளின் பெயரினை, போர்பஸ் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்த வருடமும் அப்படி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது போர்பஸ்.

இந்த ஆண்டு, போர்பஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தில் உள்ளார். ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் தலைவர் கிரிஸ்டியன் லகார்டி இரண்டாம் இடத்தினையும், அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெல்லோசி மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.

உலக நம்பர் பணக்காரரான பில்கேட்ஸின் மனைவி மெலின்டா பில்கேட்ஸ் ஆறாவது இடத்தினையும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 29வது இடத்திலும், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்திலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் 40வது இடத்திலும், டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் 42வது இடத்திலும், உள்ளனர்.

HOT NEWS