நான் ஒரு புறம்போக்கு! பரதேசி! நித்தியானந்தா வீடியோ!

06 December 2019 அரசியல்
nithayanandha21.jpg

நான் ஒரு புறம்போக்கு மற்றும் நான் ஒரு பரதேசி என, நித்தியானந்தா பேசியுள்ளார். மூன்று நாளைக்கு ஒரு முறை, இரண்டு நாளைக்கு ஒரு முறை என, யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வருகின்றார் சர்ச்சைப் புகழ் நித்தியானந்தா பேசியுள்ளார்.

கைலாசா என்ற புதிய நாட்டினை உருவாக்கி உள்ள நித்தியானந்தா, அதற்கான பணிகளில் தற்பொழுது மும்முரமாக ஈடுபட்டு உள்ளதாக பேசி வருகின்றார். இந்நிலையில், வீடியோ ஒன்றில் பேசியுள்ள நித்தியானந்தா, நான் ஒரு புறம்போக்கு என்னை யாரும் ஆட்கொள்ள முடியாது. நானும் யாரையும் ஆட்கொள்ளமாட்டேன். நான் ஒரு பரதேசி. பரத்தை மட்டுமே நேசிக்கும் ஒருவன் எனக் கூறிவிட்டு சிரித்தார்.

பின்னர், அதற்கும் விளக்கமளித்த நித்தி, ஸ்வாமி எப்படியெல்லாம் புதிது புதிதாக விளக்கமளிக்கின்றார் என அவரை, அவரே கிண்டலும் செய்துள்ளார். பேசும் பொழுது, நீண்ட நேரம் இடைவெளி விட்டு பேசும் நித்தியானந்தா, தற்பொழுது போலீசார், மீடியாக்காரர்கள் என அனைவருமே தன்னுடைய வீடியோவினைப் பார்ப்பதாகவும், அதனால் தான் நான் இடைவெளி விட்டுவிட்டுப் பேசுவதாகவும் கூறியுள்ளார்.

நான் எதற்காக, கையில் ருத்திராட்சம் அணிந்துள்ளேன், தலையில் எதற்கு பெரிய சடை வைத்துள்ளேன், எதற்காக தங்கத்தில் ஆன நகைகளை அணிந்துள்ளேன் என அனைத்துமே, ஆகம விதிகளைப் பின்பற்றியே செய்துள்ளேன். ஆனால், என்னை அனைவரும் செல்ப்ஸ்டைல்டு சாமியார் என்கின்றனர். உண்மையில், மீடியாக்கள் தான், செல்ப் ஸ்டைல்டு மீடியாக்கள்.

என்னைப் பற்றி, அவர்களுக்குப் பிடித்தவிதத்தில் எழுதுகின்றனர். நான் ஆகமவிதிகளைப் பின்பற்றும் சாமியார். செல்ப் ஸ்டைல்டு சாமியார் அல்ல எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து, தான் ஆன்மீகப் பணிகளையே செய்து வருவதாகவும், என்னை தண்டிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். என்கிட்ட இருக்கு, முடிஞ்சிக்கிறேன், உனக்கென்னய்யா… உன்கிட்ட இருந்தா, நீயும் அள்ளி முடிஞ்சிக்கோ… என பேசி சிரிக்கும் நித்தி, என் பக்தர்களை பரமேஸ்வரனும், பராசக்தியும், காலபைரவரும் பாதுகாப்பார்கள் எனவும், அவர்களுடையத் தொல்லைகள் விரைவில் அகலும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS