ஏசி, டிவிலாம் கிடையாது. இம்ரான் கான் காட்டமான பேச்சு!

22 July 2019 அரசியல்
imrankhan.jpg

சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் திரு.நவாஷ் ஷெரிப்புக்கு, ஏசி மற்றும் டிவி தர முடியாது என, அந்நாட்டின் அதிபர் திரு. இம்ரான் கான் கூறியுள்ளார்.

69 வயதான நவாஷ் ஷெரிப் அல் அஸிஸியா ஸ்டீல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்பொழுது சிறையில் உள்ளார். அவர் வீட்டில் சமைத்த உணவு, டிவி மற்றும் சிறையில் ஏசி ஆகியவைகளைக் கேட்டு கோரிக்கை விடுத்தார்.

இது குறித்துப் பேசிய இம்ரான் கான், நம் நாட்டில், பாதி பேருக்கும் மேல் டிவி மற்றும் ஏசி இல்லாமல் உள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு எதற்கு, ஏசி மற்றும் டிவி தர வேண்டும். இது எந்த மாதிரியான தண்டனை என காட்டமாகப் பேசியுள்ளார்.

HOT NEWS