தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சமடைய வேண்டாம் எனவும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தினை சேர்ந்த மாணவர்கள் சீனாவில் இருக்கின்றனர். அவர்களுடைய நிலை குறித்து, முதலமைச்சர் மூலமாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும், அங்குள்ளவர்களின் நிலைமை கேட்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
சென்னையில் அமைந்துள்ள டிஎன்எஸ் வளாகத்தில், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும் கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.