ரஜினிகாந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது! ஹெச் ராஜா விளக்கம்!

20 January 2020 அரசியல்
hraja1.jpg

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீது, எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க இயலாது என, ஹெச் ராஜா விளக்கமளித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50வது ஆண்டு விழாவின் போது, மேடையில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் எனவும், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி எனவும் மக்கள் கூறுவார்கள் என்றார்.

அதற்கு, திராவிடக் கழகம், திமுக உள்ளிட்டக் கட்சிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் மீது, பெரியாரை விமர்சித்துப் பேசியதற்காக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் வந்திருந்த ஹெச்.ராஜா அங்கு இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.

பின்னர், அவரை செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அவர்களுக்கு விளக்கம் அளித்த ஹெச். ராஜா, சட்டப்படி ரஜினிகாந்த் பேசியதற்கு, எவ்வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்க முடியாது. ஊடகங்களின் பார்வையானது, தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறான வழக்குகளை திராவிடக் கட்சிகள் ரஜினிகாந்த் மீது தொடுக்கின்றன என்றார்.

HOT NEWS